திருச்சி, மே 22 –
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சந்தைபேட்டையில் உள்ள அணியாப்பூர் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகக் கட்டிடம், 2007-08 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்தது. கிராம நிர்வாக அலுவலர் அறையில் பொதுமக்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வருவாய்த்துறை வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



