புதுக்கடை, ஜூலை 6 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உண்டு. மூத்த மகள் சரண்யா (24) முதுகலை பட்டதாரி. சம்பவ தினம் சரண்யாவின் பெற்றோர் வெளியில் சென்றனர். சரண்யா மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் பெற்றோர் வந்து பார்த்த போது மகள் திடீரென மாயமானார்.
இதை தொடர்ந்து பெற்றோர் சரண்யாவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து மகள் மாயமானது குறித்து தந்தை ராஜேந்திரன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரில் வீட்டருகே உள்ள அஜித் என்பவருடன் மகள் மாயமானதாக கூறியுள்ளார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்கள்.


