திருச்சி, ஏப். 29 –
மணப்பாறை சொக்கலிங்கபுரம் அருகே கார்த்திக் மற்றும் அவரது தந்தை முருகேசன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, யாக்கோப் என்கிற விஜயபாஸ்கர் வழிமறித்து கத்தியைக் காட்டி தாக்கி மிரட்டியுள்ளார். இதில் முருகேசனுக்கு காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகார் அளித்ததன் பேரில் மணப்பாறை காவல்துறையினர் யாக்கோபை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



