நாகர்கோவில், ஜூன் 16 –
நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ஆன்சிலி (65). இவர் நேற்று காலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்கு வந்திருந்தார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் ஊருக்கு செல்ல மருத்துவ கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்ஸில் டெரிக் சந்திப்பு வந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவன் தங்க செயினை காணவில்லை.
இது குறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஆன்சிலி புகார் அளித்தார். ஆனால் மூதாட்டியின் புகாரை உடனடியாக ஏற்காமல் நீண்ட நேரம் அங்கு மூதாட்டியை காக்க வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த சம்பவம் வெளியில் பரவியதை அடுத்து புகார் ஏற்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்சிலி பயணம் செய்த பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ கைவரிசை காட்டியுள்ளனர். அவர் பயணம் செய்த பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கூட்டம் அதிகமாக உள்ள பஸ்கலில் பயணம் செய்யும்போது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


