தஞ்சாவூர், ஜனவரி 20 –
தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறு ஒளவை கோட்ட வளாகத்தில் முரசொலி முத்தையா சின்னம்மாள் நூற்றாண்டு விழா, நினைவு அரங்கம் திறப்பு விழா நடந்தது. தஞ்சாவூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் இறைவன் நினைவு அரங்கத்தை திறந்து வைத்தார்.
வழக்கறிஞர் அமர்சிங் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இறைவனுக்கு முரசொலி முத்தையா நூற்றாண்டு விருது வழங்கினர். லயன்ஸ் சங்கம் கலியபெருமாள், கரந்தை உமா மகேஸ்வரனார், கல்லூரி முதல்வர் ராஜாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முனைவர் கலைவேந்தன், முகில்வேந்தன், முத்து மணிவண்ணன் கவிதை வாசித்தனர்.
ரெட்கிராஸ் ஜெயக்குமார், டாக்டர் முருகவேள், டாக்டர் வாசு புகழ் வணக்கம் செலுத்தினர்.
ஔவை அறக்கட்டளைத் தலைவர் கண்ணகி சிறப்பு வழிபாடும், நூற்றாண்டு காணும் முத்தையாவின் பேரன் பேத்திகள் ஒளி வழிபாடும் மலர் வழிபாடும் செய்தனர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை கெளரி, சங்கர், முத்தையா செய்திருந்தனர்.



