தென்காசி, பிப்ரவரி 24 –
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குத்துக்கல்வலசை செல்லும் சாலையின் ஓரமாக நீண்ட நாட்களாக நடைபாதை வியாபாரிகள் வணிகம் செய்துவரும் நிலையில் இவர்களுக்கு தென்காசி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை காலி செய்யக் கூறுகின்றனர் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமின்றி தங்களை நம்பி உள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய நிலையில் வியாபாரம் செய்யக் கூடாது எனக் கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிரச்சினையில் ஈடுபட்டு வரும் சம்பவம் வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



