குளச்சல், ஏப். 06 –
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத செயல்திட்டம் தொடர்பாக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் தலைமையில் குளச்சல் சுகந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத செயல்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களுக்கு விளக்க உரையாற்றினார். அதை தொடர்ந்து மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் செய்யது அகமது கரீம், பொருளாளர் யாசிர், துணை தலைவர் நபில் அஹ்மத், துணை செயலாளர்கள் முகம்மது ராபி, யஹ்யா, ஆசிக் உசேன், முபாரக்ஷா மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள், பெண்கள் தஃவா குழு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆண்கள், பெண்கள் என 300 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



