சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி சார்பில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுக்குப்பம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 195ஆவது மாமன்ற உறுப்பினர் க.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். கழகச் செயல் வீரர்களுக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆலோசனை வழங்கினார். உடன் ஏழுமலை 15ஆவது மண்டல குழுத் தலைவர் மதியழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கழகச் செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



