தென்காசி, ஜூன் 8 –
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிலையில் தென்காசியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆட்சி நடத்துவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த அவகாசத்தை வழங்காமல் எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஆட்சி செய்ய முடியாத அளவிற்கு கடுமையாக விமர்சித்து வருகிறது. கால அவகாசம் வழங்குவது தான் எதிர்க்கட்சிக்கு அழகு திமுக தனது தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற தங்களைப் போன்ற கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சிப்பது திமுக நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது.
தவெகவுக்கு ஆதரவளித்த காரணத்தினால் பேராசிரியர் காதர் மொய்தீனை விஜயின் ரசிகர் மன்ற தலைவர் ஆகிவிட்டார் என்று திமுகவினர் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர் அதிமுக ஆட்சிக்கு திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் உதவ வேண்டும் என்று பேசினார்களே இவர்கள் எப்போது எடப்பாடியின் நற்பணி மன்றத்திற்கு தலைவர்கள் ஆனார்கள் என்று முகமது அபுபக்கர் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலையால் தொடங்கப்பட்ட புதிய அமைப்பினால் இஸ்லாமியர்களின் வாக்கு பிரியாது ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள உட் பிரிவுகளில் இதுவும் ஒன்று அண்ணாமலை கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் எழுச்சியும் வரப்போவதில்லை என்று கூறினார் அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நல்ல தலைமை இல்லாத காரணத்தினால் அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போர்க்கால அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.



