தென்காசி, செப். 25 –
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் லூர்து நாடார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவந்தி ஆதித்தனாரின்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கொட்டா குளம் கணேசன், தென்காசி மாவட்ட தலைவர் ராஜ், நயினார், குருசாமி நாடார் பாலசுப்பிரமணியன், முருகன், மணிகண்டன், சுசீந்திரன், கனகராஜ், மாரிச்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, மகாபிரபு, பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



