திருச்சி, மே 11 –
மணப்பாறை அருகே துவரங்குறிச்சி புதுவயல் பட்டியைச் சேர்ந்த அழகர் (தனியார் பள்ளி பாதுகாவலர்) மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



