ராமநாதபுரம், ஜுன் 10 –
மனிதநேய மக்கள் கட்சி தொண்டிப்பேருர் செயலாளர் பரக்கத் அலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
மாணவர்கள் சிறுநீர் மற்றும் கழிப்பிடம் செல்வதற்கு கழிவறை வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொண்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2023-24 கல்வியாண்டில் சுமார் 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டப்பட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு வருட காலமாக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.
பலமுறை எடுத்துக் கூறியும் செவி சாய்க்காத தொண்டி பேரூராட்சி நிர்வாகம் கட்டப்பட்ட கட்டிடங்களில் பல்வேறு இடங்களில் விரிசல் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு கழிப்பறை கட்டடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் தனி கவனம் செலுத்தி தொண்டி பேரூராட்சி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை மனுவில் கூறி உள்ளார்.



