சேலம், ஜூன் 16 –
சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற பொது தேர்தல் – 2026 வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட சின்னம் காட்டும் இயந்திரங்களில் இருந்து தெர்மல் காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி மற்றும் காலாண்டு தணிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 – க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது சேலம் மாவட்டத்தில் உள்ள 3469 வாக்கு சாவடிகளில் 3492 சின்னம் காட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்குப்பதிவின் போது சின்னம் காட்டும் இயந்திரங்களில் இருந்த காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி மற்றும் காலாண்டு தணிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் தெர்மல் காகித சுருள் மற்றும் முகவரி தாள்கள் நீக்கம் செய்து மீண்டும் பழைய நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



