தருமபுரி, ஆகஸ்ட் 29 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோவிலூர் ஊராட்சி மற்றும் சிவாடி ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பூதனஹள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை ஆகியவை வேண்டி பொதுமக்கள் அலுவலர்களிடம் மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



