முதுகுளத்தூர், செட் 22 –
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் கீழத்தூவல் மற்றும் காக்கூரில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னிலை வகித்தார். விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் வெண்ணிலா சசிகுமார், விருதுகள் மண்டல தகவல் தெரழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர். பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பி. யூனுஸ் முகம்மது, ஜெபேரவை இணை செயலாளர் நீ. சதன் பிரபாகர், கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மு. சுந்தரபாண்டியன், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்லைவர் கதிரேசன் முன்னாள் கவுன்சிலர் ராஜசேகர், முத்துராமலிங்கம் உள்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



