திருச்சி, மே 19 –
முசிறி பகுதியில் நேற்று (மே 18) பிற்பகல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. அப்போது துறையூர் பைபாஸ் சாலை ரவுண்டானா அருகே இருந்த இச்சிமரம் ஒன்று அடியோடு முறிந்து விழுந்ததில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



