நாகர்கோவில், ஜன. 30 –
தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்த நிலையில் பார்த்தசாரதியின் செல்போனுக்கு தொடர்ந்து 3 நாட்களாக ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தொடர்ந்து தனது பெயரை தெரிவிக்காமல் பேசியுள்ளார். பார்த்தசாரதியும் உடன் படித்த மாணவர் யாராவது தன்னை போன் செய்து கலாய்த்ததாக நினைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பார்த்தசாரதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே பேசிய நபர் பார்த்தசாரதியை நேரடியாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வழுக்கம்பாறையில் உள்ள ஒரு அங்காடியில் அந்த நபர் நிற்பதாக கூறியுள்ளார். அங்கு சென்ற பார்த்தசாரதி போனில் பேசியவரை பார்த்துள்ளார். அந்த நபரை பார்த்தசாரதிக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த நபர் பார்த்தசாரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்த போது அங்கு மேலும் 2 பேர் வந்துள்ளனர்.
அப்போது செல்போனில் பேசினவர் பார்த்தசாரதியை மிரட்டி ரூபாய் 2000 ரூபாய் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் பிரேஸ்லெட் போன்றவற்றை பறித்து தப்பி சென்றனர். தான் ஏமாற்றப்பட்டது அறிந்த பார்த்தசரதி அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


