களியக்காவிளை, நவ. 24 –
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் குழித்துறை தபசியா ரிசார்ட்டில இன்று துவங்கியது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தொழில் முனைவேருக்கான மேம்பாட்டு பயிற்சியின் துவக்க விழாவில் தலைமை வகித்தார்.
ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா குழித்துறை கிளை சீப் மேனேஜர் லின் இராமச்சந்திரன் திருவிளக்கு ஏற்றி வைத்தார் கே.டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பயிற்சி சிறப்பு விருந்தினர்கள் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து துணை இயக்குனர் வீணா, ரேவதி, சுனில்குமார், எம்.எஸ்.எம்.ஈ துணை மேலாளர் ஜெரீனா பபி பேசினர்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகவுமில் பொருளாதார மேம்பாடு, வரவு செலவு கணக்குகள், எம்.எஸ்.எம். ஈ.-யின் செயல்பாடுகள், ஏற்றுமதி செய்தல், புதிய பொருட்கள் வடிவமைத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சிறந்த தொழில் முனைவோர் அனுபவம் பகிர்தல் உள்ளிட்ட பயிற்சிகள், தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.
பயிற்சி முகாம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. கேடர் இந்தியா பொருளாளர் வசந்தா தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி இயக்குனர்கள் ஜெபசாலினி, வர்த்தனா மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.



