தென்தாமரைகுளம், மார்ச் 30 –
தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் சிறுவர்கள், பெண்கள், பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று காலை தாமரைகுளம் சி.எஸ்.ஐ சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்த பவனிக்கு சேகரத்து ஆயர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் கால்வின் மற்றும் திருப்பணியாளர் தேவராஜ ஆல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பவனி ஆலய வளாகத்திலிருந்து புப்பட்டு தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன் வழியாக தென்தாமரைகுளம் ஊர் பகுதிகளை சுற்றி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பவனியில் பொறுப்பாளர்கள் பெனி ஜோசப், அருள் ஞானபெல், அருள், அனிதா, பால்சந்திர போஸ், கிறிஸ்டோ யாபேஸ், ஜெயக்குமார், கிளைச்சங்க பொறுப்பாளர்கள், சிறுவர்கள், பெண்கள், வாலிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



