திருப்புவனம், அக்டோபர் 15 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பொட்டபாளையம் KLN கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மற்றும் தமிழ்த்துறை இணைந்து ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் விழிப்புணர்வு தினம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாரம் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் டி.எஸ். பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் RTI விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக தொடர் ஜோதி எடுத்து மாரத்தான் ஓட்டம் சந்தை பகுதியில் தொடங்கிய ஜோதியுடன் கூடிய மாரத்தான் ஓட்டம், திருப்புவனம் காவல் நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் பாரதிராஜா உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் இரா. தட்சிணாமூர்த்தி, அ. முனீஸ்வரன், விஜயமாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



