தென்காசி, ஏப்ரல் 11 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அஇஅதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர், கேசவபுரம், லாலாகுடியிருப்பு, கற்குடி, தவணை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று திமுக ஆட்சியின் அவலங்கள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிமுக ஆட்சியின் சாதனைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாடு தப்பிக்கும் என்று அந்த பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வின் போது பாஜக தொகுதி அமைப்பாளர் விவேக்குமார், பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், ஒன்றிய கழக செயலாளர் அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன், அமமுக ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், புரட்சிபாரத கட்சி நிர்வாகிகள், ஒன்றிய துணை செயலாளர் சீனித்துரை, புதூர் பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.



