தஞ்சாவூர், ஜூலை 13 –
தமிழ்நாடு அரசு நடத்தும் தமிழ்நாடு தர்சன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிகாண் பருவப் பயிற்சிகள் உள்ள 2022 – 2023 ஆம் ஆண்டுகளுக்கான 18 உதவி கலெக்டர்களுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த பயிற்சிக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை தாங்கினார். பயிற்சியில் பங்கேற்ற உதவி கலெக்டர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை வெளியிட்டுள்ள சட்ட தமிழ் அகராதி நூலை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பன்னீர்செல்வம் வழங்கினார். இப்பயிற்சியின் இயக்குனரும், இந்திய மொழிகள் மற்றும் ஒரு ஒப்பிலக்கிய பள்ளி பேராசிரியரும், துறைத்தலைவருமான கவிதா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் துறை தலைவர் முருகன் நன்றி கூறினார்.



