தஞ்சாவூர், ஏப்ரல் 22 –
தஞ்சாவூர் திருவையாறு ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூர் ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திலும, திருவிடைமருதூர் கும்பகோணம், அரசினர் கலை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது.
இதற்கிடையில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளீர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையையும் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து தேவையான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்னதையும், அனைத்து வாக்கு எண்ணும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் மின் விளக்கு வசதிகள் செய்யப் படடுள்ளதையும் பார்வையிட்டார்.
மேலும் அவர் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவேண்டும். ஊடக மையத்திற்கான வசதிகள் கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடித்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



