திருச்சி, ஜுன் 5 –
திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் தலைமையில், மாவட்ட உரிமைகள் நீதிபதி அன்பு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் செல்லதுரை, பொருளாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



