சுசீந்திரம், ஏப். 11 –
சுசீந்திரம் விநாயகர் தெருவை சார்ந்தவர் விக்னேஷ். இவர் ஐடிஐ முடித்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவர் அண்ணன் விவேக்கிற்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் இன்று வீட்டில் குளியலறையில் குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வெளிவரவில்லை.
இதனால் அவரது அண்ணன் விவேக் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் கதவை உடைத்து குளியலறையில் சென்று பார்க்கும் பொழுது குளியல் அறை ஊக்கில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை கன்னியாகுமாரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளனர். இதனால் விவேக் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


