திருப்பத்தூர், ஜூலை 9 –
திருப்பத்தூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது. சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதியை மக்களின் இருப்பிடத்திற்கு கொண்டு போய் சேர்கும் தொலைநோக்கு பார்வைகளை முன்னெடுக்கும் வகையில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணுதல், தகராறுகளை இணக்கமாக தீர்ப்பதற்காக உச்சநீதிமன்றம் சமாதான் சாம்ரோஸ் (SAMADHAN SAMROJ என்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நடத்தி வருகிறது. இதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21, 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது.
பாஸ்பர ஒப்புதல் அடிப்படையில் தீர்வு வழிமுறைகள் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீர்வு காண்பதையே சிறப்பு மக்கள் நீதிமன்றம் நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்து வக்கீல்கள், வழக்குதாரர்கள், வழக்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இந்த முன்மொழிவின் கீழ் தகராறுகளை திறம்பட தீர்ப்பதில் தீவிரமாக பங்கேற்று பங்களிப்பை வழங்க வேண்டும்.
வழக்கு தாப்பினர் நோடியாகவோ அல்லது இணையதள காணொலி மூலமாகவோ ஆஜராகி தங்கள் பிரச்சினைகளை திருப்பத்தூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சட்டப்பணிகள் குழு ஆகியவற்றில் சமரசமாக தீர்துக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களுடைய வக்கீல்கள் https//forms.gle/jqxefqF4BCWzukoP6, https://www.sci.gov.in கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் கோரிக்கைகளை வருகிற 27-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர்பாக உதவி மற்றும் தகவலுக்கு திருப்பத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம்.


