தருமபுரி, அக்டோபர் 02 –
தருமபுரி மாவட்டம் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சேலம் மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக உதயமாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்து வைர விழா காணும் நமது தருமபுரி மாவட்டம் வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது. இந்த வைர விழா கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோகோ, தலை நிமிரும் தருமபுரி அகவை 60 – வைர விழா கொண்டாட்டங்கள் அக்டோபர் 2-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.



