தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரி தனியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் தருமபு மேற்கு நகர தவெக சார்பில் நகர செயலாளர் சிட்டி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட கழகசெயலாளர் சிவன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.
இதில் 1,000 கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர், மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள், ப்ரட், ஊட்டச்சத்து சாறு, ஊட்டசத்து பெட்டகங்கள் மற்றும் ரத்ததான வழங்கியதற்கான சான்றிதழ்களும், கேடயங்களையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் வீரமணி, நகர இணை செயலாளர் கவின், பொருளாளர் பாரூக், துணை செயலாளர்கள் பிரதீப்சாமி, பிரியங்கா, மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்



