திருப்பூர், ஜூன் 26 –
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வெள்ளியங்காடு பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியை சோ்ந்த ஜெயசுகன்யா மகளிர் சுய உதவிக்குழு மூலமாக அறிமுகமானார். அவா் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் மாதம் மாதம் பணம் கிடைக்கும் என்றார்.
இதனை நம்பி நாங்கள் கொஞ்சம், கொஞ்சமாக நாங்கள் பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தோம். நகைகளை விற்றும் பணம் கொடுத்தோம். ஒட்டுமொத்தமாக பலரிடம் ரூ.5.5 கோடி வரை பணத்தை பெற்றதாக தெரிகிறது. இதன் பின்னா் அவரை தொடா்புகொள்ள முடியவில்லை. அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.
இது குறித்து தெற்கு போலீசில் புகார் கொடுத்தோம். முறையான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே எங்களது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயசுகன்யா மற்றும் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனா்.



