கன்னியாகுமரி. மார்ச் 9 –
தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருதை குமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுண் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சமூகத்தில் சிறந்த சேவையாற்றி வரும் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சேவை செம்மல் விருது வழங்கும் விழா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சமூக சேவகர் ஐ.சொர்ணப்பன்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஒரு பள்ளி மாணவியை தத்து எடுத்து
அவருடைய கல்வி செலவை தான் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.
மேலும் பசியில்லா பட்டுக்கோட்டையாக மாற்ற தினசரி உணவு வழங்குவதற்காக
மாத மாதம் ஒரு சிப்பம் அரிசி அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். இவரின் பொது சேவைகளை பாராட்டி தமிழ் நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கர், தலைவர் வாசுகி சாரங்கன், தஞ்சாவூர் பொது செயலாளர் விஜய் அமிர்தராஜ், செங்கல்பட்டு செந்தில் குமார்,
திருச்சி மற்றும் தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான சமுக சேவகர்கள் கலந்து கொண்டனர்.



