நித்திரவிளை , பிப்- 19
நித்திரவிளை அருகே சமத்துவபுரம் புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ரோஸ்லின் (66). அவருக்கும் சமத்துவபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஷீபா என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. நேற்று மாலை ரோஸ்லின் அற்புதமாதா குருசடி பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியாக வழியாக வந்த ஷீபா ரோஸ்லினை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியதோடு காலால் மிதித்து தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த றோஸ்லின் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரோஸ்லின் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஷீபா கொல்லங்கோடு நகராட்சி 32 வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


