சென்னை, ஜூலை 24 –
ஆடி மாதத்தை முன்னிட்டு, தங்கம், வைரம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளுடன் ‘ஆடி சுபலாபம்’ சிறப்பு சலுகைகளை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் அறிவித்துள்ளது. ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16, 2026 வரை செல்லுபடியாகும் இந்தச் சலுகைகள், புதிய தொடக்கங்கள், வளம் மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகக் கருதப்படும் நகைகளை வாங்கி ஆடியின் மகத்துவத்தை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.
பக்தி, நன்றியுணர்வு, வளம் மற்றும் புதிய தொடக்கங்களின் மாதமாகக் கொண்டாடப்படும் ஆடி, தமிழகம் முழுவதும் ஆழமான பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டதாகும். இந்தக் காலகட்டத்தில் நகைகள் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுவதால், தங்களுக்கும் தங்களது அன்புக்குரியவர்களுக்கும் காலத்தால் அழியாத நகைகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவங்களில் இதுவும் ஒன்றாகும். ஆடி சுபலாபம் சிறப்பு சலுகைகள் மூலம், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தியபடியே, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மதிப்பை வழங்கி இந்த விழாக்காலத்தை கொண்டாடுகிறது.
ஆடி சுபலாபம் சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, அனைத்து தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரம் கட்டணத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகளின் வைர மதிப்பில் 30% வரை தள்ளுபடி பெறலாம். மேலும், பழைய தங்க நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்கும் போது பழைய தங்கத்திற்கு 0% கழிவு மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட்களின் விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி என்ற சிறப்பு சலுகையையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இதன் மூலம், தற்போதுள்ள தங்க நகைகளின் முழு மதிப்பையும் பெற்று புதிய வடிவமைப்புகளுக்கு எளிதாக மேம்படுத்திக்கொள்ளலாம்.



