புதுக்கடை, ஜன. 21 –
புதுக்கடை அருகே ராமன்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சுபேதா (58). மீனவர். இவரது மகள் கோகிலா. இவருக்கும் ஜெர்மன்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் தாய் தங்கி இருக்கும் வீட்டை மகள் கோகிலா, மருமகன் ஜெர்மன்ஸ் இணைந்து அவர்களது பேருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு சுபேதா சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவ தினம் கோகிலா மற்றும் அவரது கணவர் ஜெர்மன்ஸ் ஆகியோர் சுபேதா வீட்டிற்கு சென்று வீட்டை தங்களது பெயருக்கு எழுத கேட்டு தகராறு செய்தனர். தொடர்ந்து மாமியாரை ஜெர்மன் தாக்கி அவரது உடையை கிழித்து மானபங்கபடுத்தினார். மேலும் மகளும், மருமகனும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த சுபேதா குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


