By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

Last updated: November 4, 2025 7:06 pm
November 4, 2025
72 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 4 –

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை உடனடியாக வழங்கவும், உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து உரங்களை முறையாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கி கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால் தற்போது நடப்பாண்டில் கடந்த மூன்று மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரசாயன உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து முறையாக உரங்களை பெற்று கூட்டுறவு துறையினர் விநியோகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன் தொகையினை வழங்குவதிலும், விவசாயிகளுக்கு உரங்கள் வழங்குவதிலும் இழுபறி நிலை தொடர்வதால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடர முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள்.

எனவே, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை உடனடியாக வழங்கவும், உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து உரங்களை முறையாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் நலன் காத்திட வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா

November 7, 2024
98 Views
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account