By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

Last updated: January 5, 2026 6:02 pm
January 5, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 5 –

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எழுதியுள்ள கடிதங்களில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை நேரடியாகவும், மின்னணு முறையிலும் தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் 1.12.2025 முதல் மாவட்ட நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இம்முறைக்கு வலுவான இணையதள வசதி இருக்க வேண்டும். குறிப்பாக, மலையடி வாரப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் போதுமான இணையதள வசதியில்லை. மேலும், குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பவர்களே இணையதளத்தில் தனி முகவரியை உருவாக்கி, அதன் வழியாக மனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் வழக்கறிஞர்களுக்கு முறையான பயிற்சியினை அளித்து, பொதுமக்களுக்கும் முறையான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கட்டமைப்பு வசதிகளையும் முறையாக செய்து, இ-பைலிங் முறையில் உள்ள குழப்பங்களையும், குறைபாடுகளையும் சரிசெய்து, இணையதள வசதிகளை முறைபடுத்தாத இடங்களில் முறைபடுத்தியும், மலையடி வாரப் பகுதிகளில் இணையதள வசதிகளை தங்கு தடையில்லாமல் முறையாக உரிய கட்டமைப்பு ஏற்படுத்தி கொடுத்த பின்பு நடைமுறைபடுத்த வேண்டும்.

இந்தியாவில் கேரள மாநில நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இங்கு உரியகட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இக்கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்யாமல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கும் போது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையை தமிழக நீதிமன்றங்களில் அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை பலப்படுத்தவும், மேலும் மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் நீதிமன்றங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் முறையை செயல்படுத்துவதற்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கவும், நீதித்துறைக்கு உரிய நிதி ஒதுக்கீட்டீனை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கடிதங்களில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

டிரைவரை தற்கொலைக்கு தூண்டிய பாஜக பிரமுகர் கைது
குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்
பிள்ளைகளை தாக்கிய மத போதகர் சிறையில் அடைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

September 16, 2024
66 Views
2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.
காவல்துறையினருக்கு சன்கிளாஸ்களை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வழங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account