அரியலூர்,ஜூன்:20
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டும், மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டும் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு ஆலோசித்து தீர்மானம். மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செந்துறை ஊராட்சி மன்றம் அனைத்து வீடுகளுக்கும் 100% சதவீதம் குடிநீர் குழாய் அமைத்து வீடு தோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என கிராம சபையில் தீர்மானம் கொண்டு வந்து ஊராட்சி செயலர் ரவி வாசித்தார். கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமை வகித்தும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட காவல்துறையின் குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் குழந்தைகளுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான பிரச்சனைகள்,குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சனைகளை தெரிவிக்க உதவி எண்கள் விபரம்:
1) குழந்தைகள் பிரச்சனைகள் (1098).
2) பெண்கள் பிரச்சினைகள் (181).
3)பெண்களுக்கான ஆலோசனை (104).
4)சைபர் கிரைம் ( 1930).
5)முதியோர்களுக்கான பிரச்சனை (14567).
6)அவசர காவல் உதவி எண் (100).
இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களின் முப்புதலோடு நிறைவேற்றப்பட்டு கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.



