கன்னியாகுமரி, மார்ச் 9 –
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம், செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றோ ஸ்டெர்லின் (45). இவருக்கும் அதே பகுதி துறைமுகம் தெருவை சேர்ந்த ஜான்சன் சந்தோஷ் (24) என்பவருக்கும் இடையே கோயில் திருவிழாவில் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் ஆன்றோ ஸ்டர்லின் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ஜான்சன் சந்தோஷ் மற்றும் ஜான்பால் (52) வினிஸ்டன் ( 36), ரூபிஸ்டென் (36) மற்றும் கண்டால் தெரியும் நபர் என ஐந்து பேர் கும்பல் ஆன்றோ ஸ்டெர்லினிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதை கண்டு தடுக்க வந்த அவரது மகன் ஹர்சோனையும் தாக்கி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அவரது மனைவி மேரி எமல்டாவையும் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேரி எமல்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தந்தை மகனை தாக்கி பெண்ணை மிரட்டிய ஜான்சன் சந்தோஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


