மதுரை, அக்டோபர் 23 –
சென்னையில் நடைபெற்ற இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில் பதினொன்றாம் வகுப்பு மாணவி A.S. அனுஷ்கா ஜெனிஃபர் முதலிடம் பெற்று ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும், சிலம்பம் போட்டியில் கவின் சூரிய வரதன் முதலிடம் பெற்று ரூபாய் ஒரு லட்சம் பரிசும் பெற்றனர். இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் S. சிவரஞ்சனா, A.S.அனுஷ்கா ஜெனிபர் மூன்றாமிடம் பெற்று ரூபாய் 50,000 ரொக்கப் பரிசு பெற்றனர். தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைகான கேரம் இரட்டையர் போட்டியில் D. ஆகாஷ் V. அபினவ் கார்த்திக் மூன்றாமிடம் பிடித்து ரூபாய் 50,000 பரிசும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதனை பாராட்டும் வகையில் வெற்றி பெற்ற மாணவர்களை சிஇஓஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர். இராசா கிளைமாக்சு மற்றும் துணைத் தலைவர்கள் அசோகராஜ், பிரகாஷ், சௌந்தரபாண்டி, பள்ளி தாளாளர் ஜெனிடா, முதன்மை முதல்வர் செல்வி.கலா, முதல்வர்கள் மஞ்சுளா, கோடீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் செல்ல முருகன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.



