புதுக்கடை, ஜன. 23 –
புதுக்கடை அருகே இனயம் 9-ம் அன்பியம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி (34) மீனவர். இன்று இனயம் பஸ் நிறுத்த பகுதியில் ரெஜியும் அவரது தம்பி ஜெரின் என்பவருமாக சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வினிஸ்டன் (33) என்பவர் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் ரெஜி போன் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் வந்த வினிஸ்டன் மற்றும் அவரது சகோதரர் விஜய் (31) ஆகியோர் சேர்ந்து ரெஜியையும், ஜெரினையும் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் வினிஸ்டன் மற்றும் புஷ்ப மேரி ஆகியோரும் காயமடைந்து, வினிஸ்டன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த இருதரப்பு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


