தென்காசி, செப். 06 –
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 4-ம் தேதி மாலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து ‘சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள்’ குறித்து மாநாட்டில் பேசிய இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களும் கண்டுகளிக்கும் வகையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகளை அமைத்து நேற்று காலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, ராணி ஸ்ரீகுமார் எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட அவை தலைவர் சுப்பையா, யூனியன் சேர்மன்கள் சங்கரன்கோவில் லாலாசங்கரபாண்டியன், வாசுதேவநல்லூர் பொன் முத்தையா பாண்டியன், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள், கடற்கரை, சேர்மத்துரை, பெரியதுரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி கிழக்கு அந்தோணிசாமி, மேற்கு நாகூர் கனி, சேர்மன் பாலசுப்பிரமணியன், வக்கீல் அணி பிச்சையா, மாணவரணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி கிப்ட்சன், சுற்றுச்சூழல் அணி ஜலால் மற்றும் கழக உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



