தருமபுரி, ஏப்ரல் 20 –
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பாளையம் புதூர் கோம்பை சாமி செட்டிபட்டி மற்றும் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் சென்று வேட்பாளர் சௌமியா அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: அதிமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன் மகளிர் உரிமை தொகை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். காவேரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை மீன் மோட்டார் மூலம் ஏரி, குளம் ஆகியவைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் . சிப்காட் பணி நிறைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி முதல் மொரப்பூர் வரை ரயில்வே பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 108 ஆம்புலன்ஸ், தருமபுரி மருத்துவ கல்லூரி ஆகியவைகளை பெற்று தந்தது பாமக தான் என்றார். பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், பாமக மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அரசாங்கம், அதிமுக நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.



