சேலம், ஜூலை 24 –
சேலத்தில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு பல வருட காலமாக தமிழக மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், தினக்கூலி அடிப்படையில் ரூ.965 அரசே நேரடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவும், தமிழக அரசு மின் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக அனைத்து மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு மற்றும் மின்வாரியமும் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் மின் தடையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு சேலம் கோட்டை மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.



