திருச்சி, மே 16 –
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதிய காட்டூர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த துளசி (85) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவரிடமிருந்து 80 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராம்ஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசியை கைது செய்துள்ளனர்.


