தஞ்சாவூர், ஏப்ரல் 29 –
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசு தினத்தன்று வழங்கப்படும் பன்முக திறமைக்கான விருதான பத்ம விருது பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண், பெண்) விண்ணப்பிக்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொது விவகாரங்கள் சிவில் சேவைகள், வர்த்தகம், தொழில் போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.1.2027 நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு ஜூன் மாதம் 10 ந் தேதிக்குள் https://awards.gov.in இணையதள தளம் மூலம் வரவேற்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து விபரத்தை அரை எண் 303, 3வது தளம் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



