குளச்சல், டிச. 10 –
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (57). எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார். மனைவி வீட்டில் வைத்து மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். டியூசனுக்கு அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் 8 வயதுடைய மாணவி ஒருவர் சென்று வந்துள்ளார்.
சம்பவ தினம் இரவு டியூஷன் முடிந்ததும் பால்ராஜ் சிறுமியை தானே அவளது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அப்போது செல்லும் வழியில் பால்ராஜ் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
வீட்டிற்கு சென்றதும் மாணவி தாயாரிடம் டியூஷன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையின் கணவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்ட தாய் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் பால்ராஜ் மாணவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிந்து எலக்ட்ரீசியன் பால்ராஜை இன்று கைது செய்து நாகர்கோவிலில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



