தஞ்சாவூர், ஜூன் 22 –
சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் யோகாசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சர்வதேச யோகா தின விழா ஆரோக்கியமான முதுமையான யோகா என்னும் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகா தின கொண்டாடப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்தனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரேவதி வழிகாட்டுதலின்படி சுற்றுலா வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பயிற்சி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் தொடங் கி வைத்தார்.
தமிழன் யோகா மையத்தின் பயிற்றுனர் நாகேஸ்வரராவ் சர்வதேச யோகா தின பொதுவான யோகா நெறிமுறைகள் படி யோக பயிற்சி வழங்கினார். 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் உற்சாகத்துடன் யோக பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனர்.
உடல் நலம் மனநலம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்க ளுக்கு எடுத்துரைக்கப்பட்டது யோகா பயிற்சியை அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் யோகா மேட், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட் டு அலுவலர் செந்தில்குமார், விளையாட்டு பயிற்றுநர்கள் பாபு, ரஞ்சித், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் கோபிநாத், மை பாரத் கணக்காளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கலாச்சார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப்பண்ப்பாட்டு மையத்தில் உலக யோகா தினம் மற்றும் உலக இசை தினத்தினை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பகுதி சுற்றியுள்ள பல்வேறு பள்ளி கல்லூரி, மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர் நிகழ்ச்சியில் ரோட்டோரியன் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். யோகா பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
மேலும் பள்ளி மாணவ மாணவியர்கள் பார்வையிடும் வகையில் பிரதம மந்திரியின் 12 ஆண்டு கால தொடர் எழுச்சி மிக சாதனைகளை குறிக்கும் வகையில் பல்வேறு வெளி மாநில ஓவியர்களின் வண்ணமயமான ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியங்களை மாணவ மாணவியர் பார்வையிட்டு, மகிழ்ச்சியும் உற்சாகமடைந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.



