சங்கரன்கோவில், டிச. 2 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பால்ராஜ், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், திருவேங்கடம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், நகர அவைத்தலைவர் முப்பிடாதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜராஜன், அன்சாரி, கார்த்தி, கவுன்சிலர்கள் செல்வராஜ், ராஜா ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யதுஅலி, இளைஞரணி ஜான்சன், வார்டு செயலாளர்கள் ராமலிங்கம், வெள்ளத்துரை, முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், வக்கீல் அருணாச்சலம், மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, மாரியப்பன், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



