By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்

Last updated: April 3, 2026 6:34 pm
April 3, 2026
68 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 03 –

நாகர்கோவில் மாநகர் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் இறுதியில் வருகின்ற புனித வெள்ளியன்று அனைவருக்கும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 5வது ஆண்டு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதி இளைஞர்கள் தெரிவிக்கையில்: புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்த தியாகத்தை இந்த நாள் உணர்த்துகிறது. இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை இயேசு அனுபவித்த துன்பங்கள் அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தை மையமாகக் கொண்டு நிகழும் இவ்விழா புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கிறிஸ்தவர்கள் இந்நாளில் கருப்பு உடை அணிந்து, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளில் பங்கேற்று, இயேசுவின் பாடுகளை தியானிக்கின்றனர். இது இயேசுவின் மரணத்தின் மீதான துயரத்தை மட்டும் குறிக்காமல், அவர் மனிதகுலத்திற்காக செய்த தியாகத்தின் “நன்மை”யை மையமாகக் கொண்டதால், ‘நல்ல வெள்ளி’ என்று அழைக்கப்படுகிறது.

புனித வெள்ளி இயேசுவின் மரணத்தை மட்டுமல்லாமல், அவரது அளவற்ற அன்பையும், பாவத்திலிருந்து மீட்பையும் குறிக்கிறது. எனவே உலக ரட்சகரின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் மூலம் நாம் இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம். இந்நாளில் தேவாலய பிரார்த்தனை இறுதியில் கஞ்சி வழங்கி இந்நாளில் சிறப்பிப்பது போல் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் வணிகர்கள், இணைந்து இப்பகுதியில் வைத்து மாபெரும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியினை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறோம் தற்போது ஐந்தாவது ஆண்டாக வழங்குகிறோம் என தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள், உள்ளூர், வெளியூரை சேர்ந்த ஏராளமானோர், அவ்வழியாக கடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போன்றவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து அமர்ந்து கஞ்சி அருந்தியும், பாத்திரங்களை கொண்டு வந்து தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் கஞ்சி வாங்கி சென்றனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள், கடை உரிமையாளர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், இவர்களின் நண்பர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மதிப்பீட்டு குழுவினரிடம் நகராட்சி சேர்மன் உமா

September 9, 2024
164 Views
உலக பிரெய்லி விழிப்புணர்வு தின‌ விழா
திருப்பூர் கலப்பட தேநீர் தூள் விற்பனை அதிரடி ஆய்வுப் பணிகள்
அதிமுக – பாக செயலாளர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account