கோவை, ஜூலை 28 –
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பயணியர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். முன்னிலை கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கரிகால் பாரி சங்கர், செட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் எம்.எம்.செல்வராகவன், நல் ஒலி அறக்கட்டளை,கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சார்க் குழும நிறுவனர் மற்றும் அமைப்பாளர் ப.முருகேசன் தலைமை வகித்தார். உடன் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



