புதுக்கடை, டிச. 24 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரன் (65). இவர் சென்னையில் பெட்ரோல் வினியோக காண்டிராக்டராக உள்ளார். கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தை சேர்ந்த ஆபிரகாம் மனைவி கிருஷ்ண ரமணி. இவர் மதுரையில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் ராஜகுமாரனின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி நம்ப வைத்து பல தவணைகளாக ரூபாய் 7 லட்சம் வாங்கி பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளார். பணத்தை திருப்பி கேட்ட பிறகு எந்த பதிலும் கூறவில்லை என தெரிகிறது. இதை அடுத்து ராஜகுமாரன் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் புகார் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்த கிருஷ்ண ரமணி மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


